நன்றி:
உலக சுகாதார நிறுவனம் சொல்வது
நோய்க்குக் காரணம்
1 .உடற்கூறு குறைபாடுகள்
2.சுற்றுச்சூழல் குறைபாடுகள்
3. இரசாயனக் குறைபாடுகள்[கையாளுதலும் உட்கொள்ளுதலும்]
4.உள்ளம் சார்ந்த குறைபாடுகள்.
ஆரோக்கியத்தின் காரணம்
1.உடலின் நிலை
2.பொருளாதார நிலை
3.மன நிலை
4.ஆன்மீக நிலை.
உற்றுப் பாருங்கள்
ORDER
x DISORDER
COMFORT
x UNCOMFORT
BALANCE
x IMBALANCE
NORMAL
x ABNORMAL/ SUBNORMAL
EASE இயல்பு நிலை x DISEASE இயல்பற்ற நிலை
படைத்தவன் பகர்கிறான் “திடமாக, நாம் மனிதனை மிகவும்
அழகிய அமைப்பில் படைத்தோம்.”என்று.
ஒவ்வொரு
மனிதனின் உடலும், உலகின் தலைசிறந்த மருத்துவர் [டாக்டர்]. உரிய ஓய்வு மிகச்சிறந்த
மருந்தாகும்.நமது உடல் மிகச்சிறந்த படைப்பாகும். உடல், “தனக்குத் தேவையான அத்துனை
உறுப்புகளையும் தன்னகத்தே கொண்டு,தன்னைப் பராமரித்துக்கொள்ள மட்டுமின்றி தன்னை
வளர்த்துக் கொள்ளவும், தான் தயாராகவே இருப்பதாக உறுதியாக நிரூபிக்கின்றது”.
ஒவ்வொரு சராசரி
மனிதனின் உடலும், தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு இயங்குவதற்கும், எங்காவது
எப்போதாவது நிலை மாறிடுமபோது மீண்டும் தன்னைப்
பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவைப்படும் திறமையை இயற்கையாகவே தன்னகத்தே
கொண்டு, உட்புற உறுப்புகளைத் தத்தமது இடத்திலிருந்து பிறழாமல் பக்குவப் படுத்திப் பாதுகாத்துக் கொள்ளத் தக்க தகவமைப்பைப்
பெற்று இலங்குகிறது.
பிறக்கும்போதிருந்தே
ஒவ்வொரு சராசரி மனிதனின் உடலும் பெற்றிருக்கும் இத் தகவமைப்புதான், நாம்
நோய்வாய்ப் படும்போது நோயிலிருந்து
நிவாரணம் பெற்றிட உதவுகிறது; மருத்துவர்களோ மருந்துகளோ அல்ல!
ஒவ்வொரு சராசரி
மனிதனின் உடலும் இச்சிறப்பைப் பெற்றிருப்பதால், “இந்நோயைக் குணமாக்க இயலாது“ எனும்
வார்த்தைகளைக் காதில் கேட்கும்போது, நாம் ஒவ்வொருவரும் மிகக் கவனமாகச்செயல்பட
நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். எந்த நோயின்போது இவ் வார்த்தைகள்
கூறப்படுகின்றனவோ அவை, வரையறுக்கப்பட்ட அவர்களின் அனுபவத்தின்
எல்லையைத்தான்
அதிகாரப்பூர்வமாக விளம்பரப் படுத்துகின்றனவே
யொழிய,
உண்மை நிலையானது!
நோயின்போது,
“மருந்து மட்டும் உட்கொண்டால் போதும் “ என்கிற ஒரு முறை மனித சமுதாயத்தில் பரவலாக
நடைமுறைப்படுத்தப்
படுத்தப்பட்டு
வருகிறது. இது முற்றிலும் தவறாகும்.
மாறாக ஒரு
சராசரி உடலில் நோய் ஏற்படும்போது இயல்பு நிலைக்குத் திரும்பு வதற்கு 3 வகையினர் 3
வகையில் முயற்சி செய்யவேண்டும்:
3
வகையினர்:
1.நோயாளர்
2.நோயாளரின் நலத்தில் அக்கறை கொள்வோர்
3.முறையாக மருத்துவம் கற்ற
மருத்துவர்கள்.
3 வகை
முயற்சிகள்:
1.தேவைப்படும் போதுமான ஓய்வு.
2.எளிதில் ஜீரணமாகும் உணவைப் போதுமான
அளவில் உட்கொள்வது.[மனமும் நாவும்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
சரியே!]
3.உடல் ஏற்றுள்ளத்தக்க
மருத்துவம்.
பொதுவாக
எந்த செயலிலும் பலன் கிடைக்கவேண்டுமெனில், கீழ்க்காணும் 3 வித
முயற்சிகளுக்கேற்பதான் பலன் கிடைக்கும் என்பது வெள்ளிடைமலை!
1.சம்பூரணமான
முயற்சி
2.தேவைப்படும் முயற்சி
3.சாத்தியமான முயற்சி.
அண்மைக்காலமாக,
சிறப்பான மருத்துவத் துறையில் “டெர்மினல்-இறுதி நிலை “ எனும் சொல்வழக்கு,
அவசியமற்ற பயத்தை மக்களுக்கிடையில் அநாவசியமாகதப் பரப்பி வருகிறது. இச்சொல்வழக்கின்
காரணமாக மனித உடலின் சிறப்பியல்புகள் வெளிவரயியலாமல் அமுக்கப்பட்டுவிடுவதோடு
மனிதனை நன்றிகொன்றவனாகவும் ஆக்கிவிடுகிறது என்பதே உண்மை! .
ஆனால் மனித
உடல், ஆதாரமற்ற இத்தகு சொல்வழக்கை செல்லாததாக ஆக்கிவிடும் செல்வாக்குப்பெற்றது
ஆகும்!
படைத்தவனின் செயல் திட்டம்:
“திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்;
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்;
அன்றியும்,
இரவை உங்களுக்கு
ஆடையாக ஆக்கினோம்;
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்)
ஆக்கினோம்”
நாம் பல இடங்களில்,குறிப்பாகக் கிராமப்புறங்களில்
சாதாரணமாகக் காணக்கூடியவை:
1.கைத்தடி இல்லாமலும், கண் கண்ணாடி இல்லாமலும்,
செயற்கைப் பற்கள் இல்லாமலும், செயற்கை முடி இல்லாமலும் இயல்பான வாழ்க்கை நடத்தும் பாட்டனார்கள்.
2. கைத்தடி இல்லாமலும் ,கண் கண்ணாடி
இல்லாமலும்,
செயற்கைப் பற்கள் இல்லாமலும்,செயற்கை முடி இல்லாமலும் இயல்பான வாழ்க்கை நடத்தும் பாட்டிமார்கள்.
3. கைத்தடி இல்லாமலும் ,கண் கண்ணாடி
இல்லாமலும்,
செயற்கைப் பற்கள் இல்லாமலும், செயற்கை முடி இல்லாமலும் இயல்பான வாழ்க்கை நடத்தும் கொள்ளுப்
பாட்டனார்கள்
4. கைத்தடி இல்லாமலும், கண் கண்ணாடி இல்லாமலும்,
செயற்கைப் பற்கள் இல்லாமலும், செயற்கை முடி இல்லாமலும் இயல்பான வாழ்க்கை நடத்தும்
கொள்ளுப்பாட்டிமார்கள்.
ஆறாம்
அறிவு எனும் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதன், சிந்தித்துப் பகுத்தறிந்திட
முற்படின் மடமை மருந்துக்கும் இருக்காது!